Saturday, January 25, 2014

Rava Paniyaram

தேவையான பொருட்கள்:
ரவா - 1 கப்
மைதா - 1 கப்
சர்க்கரை - 1.5 கப்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு

செய்முறை:
ரவாவை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதில் மைதாவையும், சர்க்கரையையும் கலந்து ஒரு திக்கான கலவையாக்கிக் கொள்ளவும். சர்க்கரை நன்கு கரையும்வரை கலக்க வேண்டும். கட்டி இல்லாமல் கலக்க வேண்டியது அவசியம். அடுப்பில் வாணலியை ஏற்றி, ரவா- மைதா கலவையை ஒரு ஸ்பூனால் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் ஊற்றி நன்கு சிவந்து ப்ரௌன் கலருக்கு வந்ததும் எடுத்து தட்டில் வைத்து பறிமாறவும்.
Paal(milk) Paniyaram

தேவையான பொருட்கள்:
பச்சரிசி – அரை கப்
உளுந்து – அரை கப்
தேங்காய் – ஒன்று
பால் – ஒரு டம்ளர்
ஏலக்காய்
சீனி – தேவையான அளவு

செய்முறை:
உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு(தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) அரைக்கவும். தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சீனி சேர்த்து வைக்கவும். அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும். நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்.. பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து, அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்.
Sweet Kuli Paniyaram

தேவையானவை :
இட்லி அரிசி- 2 கப்
உளுந்து- கால் கப்
வெந்தயம்- 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம்- 11/2  கப்
உப்பு- தேவையானளவு
எண்ணெய்- தேவையானளவு.

செய்முறை :
அரிசியுடன் உளுத்தம்பருப்பு வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து ஊறவைத்து நைசாக அரைத்து உப்பு சேர்த்து இரவு முழூவதும் புளிக்கவைக்கவும். மறுநாள் அதில் வெல்லத்தை கரைத்து வடிகட்டி மாவில் ஊற்றீ கலக்கவும். தோசை மாவு பதத்தை விட சற்று கெட்டியாக கரைத்து வைக்கவும். குழிபணியாரச் சட்டியை அடூப்பில் வைத்து காயவைத்து ஒவ்வொரு குழியிலும் எண் ணெயை ஊற்றி சூடாக்கி அதில் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டூ வேகவிடவும்.சுற்றி என்னை விடவும். இவ்வாறு அனைத்து மாவையும் சுட்டெடூக்கவும். இப்பொழுது குழிப் பணியாரம் ரெடி.

குறிப்பு : வெல்லத்தை காய்ச்சும் பொது சிறிது தண்ணீர் விடவும்.பாகு பதம் கவனமாக பார்த்து வடிகட்டி மாவுடன் சேர்க்கவும்.

Friday, January 24, 2014

Mango Rice

தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கோப்பை (200 கிராம்)
மாங்காய் - 1 சிறியது (சுமாரான புளிப்பு)
காய்ந்த மிளகாய் - 4
வெந்தயத் தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - 3 கொத்து
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 3 சிட்டிகை
நிலக்கடலை - 25 கிராம்
நல்ல எண்ணெய் -25 கிராம்
உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:
அரிசியை கழுவி 2 1/2 கோப்பை தண்ணீர் விட்டு குலையாமல் வேக வைத்து ஒரு தட்டில் ஆற வைத்துக் கொள்ளவும். மாங்காயை துருவிக் கொள்ளவும். நிலக்கடலையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, ஊளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து பின் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெந்தயத் தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும். அடுத்து துருவிய மாங்காயைப் போட்டு நன்றாக வதக்கவும். பின்பு உப்பு சேர்த்து நன்றாக கலந்து உடனே அடுப்பிலிருந்து இறக்கவும். இதில் ஆறிய சாதம், வறுத்த நிலக்கடலை போட்டு, சாதம் குலையாமல் கிளறி வைக்கவும்.

Wednesday, January 22, 2014

Puliyotharai
தேவையானவை:
சாதம் - 4 கப்
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
புளி - ஒரு ஆரஞ்சு அளவு
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய் – 5
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
எள் - ஒரு மேசைக்கரண்டி

தாளிக்க:
கடுகு - ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
பெருங்காயம் – சிறிது
காய்ந்த மிளகாய் – 7
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

செய்முறை:
சாதத்தை வடித்து எண்ணெய் கலந்து வைக்கவும்.
வறுக்க தேவையான பொருட்களை எடுத்து, எல்லாவற்றையும் தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து எடுக்கவும். 
எள்ளை வாணலியில் போட்டு சடசடவென பொரிந்ததும் எடுக்கவும்.
அரைத்த அனைத்தையும் சேர்த்து நைசாக பொடிக்கவும்.
புளியை 2 கப் நீர் விட்டு ஊற வைக்கவும். 

தாளிக்க தேவையானதை எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, கிள்ளிய மிளகாய், கடலைப்பருப்பு சேர்க்கவும். 
பருப்பு சிவந்ததும் வேர்கடலை சேர்த்து பிரட்டி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
இதில் கரைத்த புளியை வடிக்கட்டி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து புளி வாசம் போய் சற்று கெட்டி ஆக ஆரம்பித்ததும் பொடித்த பொடியில் முக்கால் பாகத்தை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

நன்கு ஆறிய சாதத்தில் புளிக்காய்ச்சல், மீதம் உள்ள பொடி சேர்த்து நன்றாக கலந்து அழுத்தி வைக்கவும்.
குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற விட்டு பரிமாறவும்.
சுவையான புளியோதரை தயார்.

Thursday, January 16, 2014

Ragi Rava Dosa

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு - கால் கப்
ரவை கால் கப்
கோதுமை மாவு - கால் கப்
தோசைமாவு - கால் கப்
உப்பு - அரைதேக்கரண்டி
நல்லெண்ணை - சுட தேவையான அளவு

செய்முறை:
மாவு வகைகளில் உப்பு சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொஞ்சம் தண்ணியாக கரைத்து கொள்ளவும். நான்ஸ்டிக் தவ்வாவில் ஒரு கரண்டி அளவு தோசையை பரத்தி சுற்றிலும் நல்லெண்ணை விட்டு சுட்டு எடுக்கவும். சுவையான ஹெல்தியான டயட் தோசை ரெடி. தொட்டுகொள்ள சின்ன வெங்காய சாம்பாருடன் அருமையாக இருக்கும்.

Sunday, January 12, 2014


தேவையானவை:
சுமாராக புளித்த மோர் – 500 மில்லி
வெண்டைக்காய் – 10
கடலைப்பருப்பு
வெந்தயம் – தலா அரை டீஸ்பூன்
தனியா – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
அரிசி – ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் - ஒரு கப்
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – அரை டீஸ்பூன்.

செய்முறை:
கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து… தேங்காய் துருவல், அரிசி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். அந்த விழுதை ஒரு பாத்திரத்தில் மோருடன் கலந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். வெண்டைக்காய்களை துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கி, கலந்து வைத்து இருக்கும் மோருடன் சேர்க்கவும். இதை மிதமான தீயில் சுட வைத்து லேசாக கொதித்ததும் இறக்கவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்க்கவும்.
சுவையான மோர்க்குழம்பு  தயார்.